கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை பாதயாத்திரை 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானம் கிளிநொச்சி தொண்டமாநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்நது.

இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் இறைமக்களென 800க்கும் அதிகமானவர்கள் கலந்து செபித்தனர்.

By admin