கிளறேசியன் சபை அருட்சகோதரர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு திருச்சடங்கு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனியா பம்பைமடு இறையிரக்க ஆலயத்தில் நடைபெற்றது.

சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரர்கள் அஜந்தன் குலாஸ், இருதயராஜ் லியோன், கிங்சிலி சுரேஸ், மெறின்ராஜ், ஸ்ரிபன்ராஜ் மொறைஸ் ஆகியோர் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் குடும்ப உறுப்பினர்களென பலரும் கலந்து அருட்சகோதரர்களுக்காக செபித்தனர்.

By admin