மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை சகாயநாதன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஹர்சதன் ரிச்சர்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை கலைநிகழ்வுகளும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

By admin