இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலைப்பொழுது கலை நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி பொது மண்டபத்தில் நடைபெற்றது.
பழைய மாணவர் சங்க தலைவர் திரு. அன்ரன் டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் ‘ஏகலைவன்’ நாட்டுகூத்தும் இளவாலை திருமறைக் கலாமன்றத்தினால் திரு. றொபின்சன் அவர்களின் நெறியாள்கையில்‘லீசிங் மாப்பிள்ளை’ நாடகமும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்களால் ‘விருது யாருக்கு’ நாடகமும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகளால் தேசியரீதியில் முதலிடத்தை பெற்ற நடனமும் ஆற்றுகை செய்யப்பட்டன.

By admin