யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிலா அரங்கு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அழகியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ். பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மாணவர்களின் பெற்றோர்கள், மன்ற நிர்வாக உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin