கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவும் கனடா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 30 ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி பணியக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா மற்றும் திருவிழா திருப்பலிகளை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வழிபாடுகளில் 500ற்கும் அதிகமான மக்கள் கலந்து செபித்தனர்.

By admin