கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இறைதியான இல்லத்தில் நடைபெற்றது.
புதுவாழ்வு குழுமத்தின் ஆன்மீக குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த புரட்டாதி மாதத்திலிருந்து 16 உரைகள் ஊடாக உருவாக்கம் பெற்றுவந்த 32 பேர் இக்குழுவில் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
அன்றய தினம் உபவாசம் பாவசங்கீர்தனம் போன்ற ஆன்மீக தயார்படுத்தல் நிகழ்வுகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் குருக்கள், அருட்சகோதரிகள், புதுவாழ்வு குழுமத்தின் உறுப்பினர்களென 50 வரையானவர்கள் கலந்து செபித்தனர்.

By admin