யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுக்கும் ஒன்றிப்பு வார நிகழ்வுகள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.
ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி மருதனார்மடம் “கிறிஸ்த சேவா ஆச்சிரமத்தில்” அதன் பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜெரோம் அண்ணன் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆச்சிரம அன்பர்களும், வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இறைமக்களும் அருட்பணியாளர்களும் குருமாணவர்களும் பங்குபற்றினர்.
யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து அருளுரை வழங்க, இறுதி ஆசீரை அங்கிலிக்கன் சபைக் குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன் அவர்கள் வழங்கினார்.
இவ் ஒன்றிப்பு வார இறுதி நாள் நிகழ்வு வருகின்ற 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

By admin