சுன்னாகம் பங்கின் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் இந்நாளை சிறப்பிக்கும் முகமாக புனித இசிதோர் ஆலயம் ஏழாலை என்னும் பெயரில் ஆலயத்திற்கான புதிய இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

By admin