ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அச்சுவேலி திரேசாள் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஏழாலை இசிதோர் றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin