மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டக்லஸ் மில்ரன் லோகு அவர்களின் ‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றன.

பேசாலை பத்திமா கழக தலைவர் திரு. புறூனோ டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான நயப்புரையை மாங்குளம் அமதி கரங்கள் இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ், கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ், மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி சங்கீத ஆசிரியை திருமதி ஆன் தர்சிக்கா மெல்பர் டலிமா அகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய அதிபர் திருமதி. பிபியன் பீரிஸ் மற்றும் பேசாலை பத்திமா கழக ஆலோசகர் திரு. கிறிஸ்ரி றெவ்வல் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin