பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்ரனிபுரம் மாலைக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் காலை 9:00 மணி தொடக்கம் மாலை 3:30 மணி வரை நடைபெற்ற இக்கருத்தமர்வில் ஊறணி, பலாலி, வளலாய் பிரதேசங்களை சேர்ந்த 100 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினரால் வழங்கிவைக்கபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

By admin