யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி 04ஆம் வருட இறையியல் மாணவர்கள் ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் திரு. விஜயசுந்தரம் மற்றும் ஈழத்து குறும்பட இயக்குநர் திரு. மதிசுதா ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் ஒளி, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, சமூகவலைத்தள நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, ஊடக தொழில்நுட்ப செயற்பாடுகள் போன்ற பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

By admin