லம்போதரா உளவிழிப்புணர்வு செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் பளை மத்திய கல்லூரியின் தரம் 11 மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள விழிப்புணர்வு கருத்தமர்வு 30, 31ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் லம்போதரா உள விழிப்புணர்வு செயற்பாட்டு நிலைய ஸ்தாபகரும் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளருமான திரு. தினகரன் ரவி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை தொழில் வழிகாட்டல் ஆலோசகர் திரு. விஸ்வஜிந்தன், திரு. சிவதனேஸ், அருட்சகோதரி சிறிய புஸ்பம், திரு. தினகரன் ரவி ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினர்.

உள அமைதி மேம்பாட்டில் சுய கற்றலை விருத்தி செய்து தொலைநோக்கு உருவாக்கலை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கான அனுசரணையை பாடசாலையுடன் இணைந்து கல்லூரியின் பழைய மாணவர்களான திரு வினாசித்தம்பி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin