யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 9ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

அகவொளி இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்கைநெறியை பூர்த்திசெய்த 23 மாணவர்கள் டிப்ளோமா சான்றிதழை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நிறுவன முந்நாள் இயக்குநர் அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். பிரதேச செயலக ஆற்றல் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. நீலாம்பரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin