கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சர்வமத சமூகமட்ட விழிப்பு குழுவினர் மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட உறவுப்பால களஅனுபவ நிகழ்வு கடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழு அங்கத்தவர்கள் மற்றும் இளையோர் திருகோணமலை மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு திருகோணமலை கரித்தாஸ் எகெட் நிறுவன சமூக மட்ட விழிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளையோரை சந்தித்து கலந்துரையாடி அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருத்தந்தை போல் றொபின்சன் மற்றும் பணியாளர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

By admin