செபமாலைதாசர் சபை அருட்சகோதரிகளின் மாகாண முதல்வர்களுக்கான உருவாக்கல் பயிற்சி கடந்த 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

ஆன்மீக வழிகாட்டி அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோசப் அலோசியஸ் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகளுக்கான கருத்துரைகள் இடம்பெற்றதுடன் உருவாக்கல் பயிற்சியின் இறுதி நாள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பு ஆசீரையும் வழங்கியிருந்தார்.

By admin