உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 56 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

By admin