இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 10ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இயக்குநர் அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் நிறாஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரோல் கீதங்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை பிறையன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் மற்றும் இசைமானி திருமதி நீதிமதி ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இளையோர்களென 130 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin