இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றோய் அலைக்சின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு சிறுவர்கள், இளையோர், அன்னையர் மற்றும் தந்தையர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சில்லாலை றோ.க.த.க. பாடசாலை ஓய்வுநிலை அதிபர் திருமதி மரியகொறற்ரி பியன்வெனு அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் சண்டிலிப்பாய் பிரதேச இளையோர் சேவை உத்தியோகத்தர் திரு. அகிலராஜ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.

By admin