இலங்கை இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் கரோல் நிகழ்வு 28ஆம் திகதி வியாழக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்ட பங்கு ஆலயங்களை சேர்ந்த பாடகர் குழுவினர் கலந்து கரோல் கீதங்களை இசைத்தனர்.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்தோப்பர் அந்தோனிதாஸ் டலிமா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin