இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் குழு யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஸ், தூதுவர் குழுவின் அரசியல் செயலாளர் பற்றிக் பிக்கறிங் மற்றும் அரசியல் அதிகாரி சாகித்தியனன் கணேசநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin