யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை டி மசனெட் இறையியல் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இறையியல் கருத்தமர்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசெனட் இறையியலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘ஓரின ஜோடிகளுக்கான ஆசீர்வாதம்’ எனும் பிரகடனத்தை கருப்பொருளாக கொண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி உருவாக்குநர் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருத்துவக் கல்லூரியின் இறையியல் மாணவர்கள் புனித வளனார் சிறிய குருமட மாணவர்களென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin