இராணுவத்தின் 54ஆவது காலாட் படையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கரோல் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் முதன்மை விருந்தினராகவும் வன்னி பிராந்திய பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் டினேஸ் நாணயக்கார அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரச அரச சார்பற்ற அதிகாரிகள், சமய தலைவர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin