இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார்.

சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் கற்று 2000ஆம் ஆண்டு சிலாப மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியுள்ள இவர் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் தனது உயர்கல்வியை நிறைவு செய்தார்.

2007ஆம் ஆண்டு தொடக்கம் இரத்தினபுரி மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை கிளீட்டஸ் பெரெரா அவர்கள் 76 வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அம்மறைமாவட்டத்திற்கு சிலாபம் மறைமாவட்டத்தின் குருவாகிய அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் புதிய ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin