மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைக்கப்பட்டுவந்த அவரின் உருவச்சிலை திறப்பு விழா 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து ஆயர் அவர்களின் உருவச்சிலையை திரை நீக்கம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin