யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது நற்கருணைப் பணியாளர் குழாமில் இணைந்து 20 வருடங்களுக்கு மேலாக நற்கருணைப் பணியாளராக பணியாற்றிவந்த திரு. ஜோசப் எட்வர்ட் ராசநாயகம் அவர்கள் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குதிரு அவையை சேர்ந்த இவர் எடுத்துக்காட்டான ஒரு பொதுநிலை பணியாளராக பணியாற்றி மறைமாவட்டத்திற்கும் பங்கு திருஅவைக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
அன்னாரின் பணிவாழ்வுக்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.

By admin