மன்னார் மறைமாவட்டக்குருவும் மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனருமான அருட்தந்தை ஜொனார்த்தனன் அவர்கள் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கி இறைவனடி சேர்ந்துள்ளார்.

அருட்தந்தை அவர்கள் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து 2022ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

குருத்துவ திருநிலைப்படுத்தலை தொடர்ந்து மருதமடு திருத்தலத்தில் உதவிகுருவாகவும் தொடர்ந்து மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin