மருதனார்மடம் கிறிஸ்தசேவா ஆச்சிரமத்தில் பணியாற்றி இறைபதமடைந்த அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆச்சிரம சிற்றாலயத்தில் நடைபெற்றது.
ஆச்சிரம பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜெறோம் தயாளகுணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளும் தொடர்ந்து நன்றி வழிபாடும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தென்னிந்திய திரு அவையின் யாழ். மாவட்ட பேராயர் பேரருட்தந்தை வேலுப்பிள்ளை பத்மதயாளன், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் அருட்பணியாளர்கள், ஆச்சிரம அன்பர்கள், கிராம மக்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin