அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் ‘தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’ என்னும் உயர்நிலை கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும் அறங்காவலர் சபையினர், மதகுருக்கள் முன்னிலையில் அருட்தந்தை அவர்கள் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
அருட்தந்தை அவர்களின் சமூகத் தன்னார்வ தொண்டுப் பணிகள் ஊடாக மனித நேயத்தையும் மாண்பையும் பாதுகாத்து மேம்படுத்தும் செயற்பாடுகளை கௌரவித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளதுடன் அருட்தந்தை அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவராக நியமனம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin