மட்டக்களப்பு சொறிக்கல்முனை பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது மக்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து இறந்த அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin